ஜின்டால் வழக்கு.. ஜீ டிவி செய்தியாளர்களின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: காங்கிரஸ் எம்.பி.யும், தொழிலதிபருமான நவீன் ஜின்டாலிடம் ரூ. 100 கோடி கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள 2 ஜீ டிவி செய்தியாளர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை டெல்லி கோர்ட் திங்கள்கிழமை வரை ஒத்திவைத்துள்ளது.
ஜீ டிவியில் செய்தி ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் சுதிர் செளத்ரி மற்றும் சமீல் அலுவாலியா ஆகிய இருவரும் நவீன் ஜின்டாலிடம் ரூ. 100 கோடி கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து திஹார் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் ஜாமீன் கோரி மனு செய்தனர். அந்த மனு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி, இருவரிடமும் விசாரணை முடிவடைந்து விட்டதாகவும், இனியும் அவர்களை போலீஸ் காவலில் எடுக்கத் தேவையில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறியதைத் தொடர்ந்து திங்கள்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications