மக்களுக்கு எதுவுமே செய்ய முடியலையே... ஜெயசுதாவின் வேதனை

Subscribe to Oneindia Tamil

Jayasutha
ஹைதராபாத்: நான் காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏவாக உள்ளேன். ஆனால் என்னால் மக்களுக்கு எதுவுமே செய்ய முடியாத நிலையே உள்ளது. இது வேதனை தருகிறது என்று நடிகை ஜெயசுதா கூறியுள்ளார்.

இரட்டை நகரமான செகந்தராபாத் தொகுதியிலிருந்து ஆந்திர மாநில சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயசுதா. காங்கிஸ் கட்சியைச் சேர்ந்தவரான இவர் கூறுகையில், இப்போது நடிகைகள் பல லட்சம் சம்பளம் வாங்குகிறார்கள். நான் சினிமாவில் இருந்த காலத்தில் இவ்வளவு சம்பளம் கிடைக்கவில்லை. சில ஆயிரங்கள் தான் சம்பளமாக கொடுத்தார்கள். ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தில் ரூ. 10 ஆயிரத்தை ஏழை நோயாளிகளுக்கு உதவ ஒதுக்கி வைத்து விடுவேன்.

எம்.எல்.ஏ.வானால் அதிகம் சேவை செய்யலாம் என்று கருதி அரசியலில் இணைந்தேன். ஆனால் எம்.எல்.ஏ.வாக இருந்தும் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது ஒரு நோயாளியை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கே ரூ. 20 ஆயிரம் தேவைப்படுகிறது. அப்படி இருக்க எனது தொகை போதுமானதாக இல்லை. எம்.எல்.ஏ. ஆன பிறகுகூட எதுவும் பண்ண முடியவில்லை இது வருத்தம் தருகிறது என்றார் ஜெயசுதா.

சரி ஏன் போய் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியில் நீங்கள் சேரவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சில காரணமாகத்தான் நான் போகவில்லை என்றார் ஜெயசுதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+