திருகோணமலை கடற்பரப்பில் 37 தமிழக மீனவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
திருகோணமலை: இலங்கையின் கிழக்குப் பகுதியான திருகோணமலை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி 37 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இன்று காலை கைது செய்துள்ளது.
திருகோணமலையின் புல்மோட்டை கடற்பரப்பில் 5 ரோலர் படகுகளில் 37 தமிழக மீனவர்களும் பிடித்தனர் என்றும் இவர்கள் அனைவரும் தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் வர்ணகுல சூரிய தெரிவித்துள்ளார்.
37 தமிழக மீனவர்களும் திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்ட்டிருக்கின்றனர். இவர்கள் திருகோணமலை துறைமுக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications