தமிழகத்திற்கு பேஸ்புக்கில் புதுப் பெயர்.. இருளும், இருள் சார்ந்த இடமும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்தடையை வைத்து ஏகப்பட்ட எஸ்.எம்.எஸ். கலாய்ப்புகளை தமிழக மக்கள் பார்த்து விட்டனர். இந்த நிலையில், பேஸ்புக்கில் புதிதாக ஒரு படத்தைப் போட்டு மிரள வைத்துள்ளனர் சிலர்.

A new image slamming TN's power cut spreads in FB

தமிழன் அக்காலத்தில் நிலத்தை ஐவகையாக பிரித்து வைத்தான். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்பது இவை. குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும். முல்லை என்பது வனமும், வனம் சார்ந்த இடமும் ஆகும். மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமுமாகும். நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த இடமுமாகும். பாலை என்பது மணலும், மணல் சார்ந்த இடமுமாகும்.

இதை வைத்துத்தான் தற்போது பேஸ்புக்கில் விளையாடியுள்ளனர் சிலர். அதாவது இந்த ஐவகை நிலத்துடன் இன்னொரு நிலத்தை சேர்த்துள்ளனர். அதுதான் தமிழகமாம். அதற்கு அவர்கள் கொடுத்துள்ள விளக்கம், இருளும் இருள் சார்ந்த இடமும் என்பதாகும். அதில் கருப்பு நிறத்தில் தமிழகத்தின் வரைபடத்தைப் போட்டு இடது பக்கம் முதல்வர் ஜெயலலிதா மற்றும் வலது பக்கம் திமுக தலைவர் கருணாநிதியின் படத்தையும் போட்டு வைத்துள்ளனர்.

இந்த பேஸ்புக் கிண்டல் படம் படு வேகமாக இன்டர்நெட்டில் பரவி வருகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+