சென்னையில் டிச.17ல் கலெக்டர்கள்- போலீஸ் அதிகாரிகள் மாநாடு
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு வரும் டிசம்பர் 17ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு வரும் 17, 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டின் முதல் நாள் 17-ந்தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கூட்டமும், 18-ந்தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான கூட்டமும் மற்றும் 19-ந் தேதி காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications