நீடிக்கும் வஞ்சகம்.. மத்திய அரசின் கீழ் ஏன் நீடிக்க வேண்டும் தமிழகம்?: வைகோ
Subscribe to Oneindia Tamil

திருச்சியில் நேற்று 'நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:
சூடானால் நைல் நதியில் பிற நாடுகளின் மீதான உரிமைகளை மறுக்க முடியவில்லை. ஐரோப்பிய நாடுகள் தனுபே நதிநீர் விவகாரத்தில் சுமூகமாகவே தீர்வு காண்கின்றன. ஆனால் இந்திய மாநிலங்கள்தான் மற்ற மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கின்றன.
நதிநீர் விவகாரங்களில் மத்திய அரசு தொடர்ந்தும் வஞ்சகப் போக்கை கடைபிடித்தால் இந்த மத்திய அரசின் கிழி ஏன் தமிழ்நாடு இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழும்.. அதுமட்டுமல்ல.. இந்தியாவின் 100-வது விடுதலை நாள் விழாவில் இந்தியா ஒன்றுபட்ட ஒரு நாடாக இருக்காது என்றே எச்சரிக்கிறேன்.
தமிழகத்துக்கு காவிரி நீரைத் தராக கர்நாடகாவுக்கு நாம் ஏன் நெய்வேலி மின்சாரத்தை தர வேண்டும்? தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்டியாக வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications