ருஷ்டியின் 'பங்களா' பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது! கிடைச்சது ரூ100 கோடி!
டெல்லி: சல்மான் ருஷ்டியின் தந்தை காலத்தில் தொடங்கிய டெல்லியில் இருக்கும் பங்களா உரிமை தொடர்பான விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் பங்களாவை ருஷ்டி இழந்தாலும் அவருக்கு ரூ100 கோடி கிடைக்கக் கூடும்.
சல்மான் ருஷ்டியின் தந்தை 1970ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிகு ராம் ஜெயின் என்பவருக்கு தமது டெல்லி பங்களாவை வாடகைக்கு விட்டிருந்தார். பின்னர் சில நாட்களிலேயே அதை ரூ3.75 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக பத்திரம் தயாரிக்கப்பட்டது. இதில் ரூ50 ஆயிரம் ருஷ்டியின் தந்தைக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ருஷ்டியின் தந்தை அந்த பங்களாவை ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு கடந்த 40 ஆண்டுகாலமாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று வந்தது.
தற்போது உச்சநீதிமன்றத்தில் முடிவுக்கு வந்திருக்கிறது இந்த வழக்கு. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த பங்களாவை பிகுராம் ஜெயின் வாரிசுகளிடம் ஒப்படைக்கலாம் என்றும் அதே நேரத்தின் சல்மான் ருஷ்டிக்கு இன்றைய சந்தை மதிப்பில் உரிய தொகை கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. இன்றைய சந்தை மதிப்பின் அடிப்படையில் அனேகமாக ரூ100 கோடி ருஷ்டிக்கு கிடைக்கலாம்.












Click it and Unblock the Notifications