பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத 1000 பள்ளிகளுக்கு அரசு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத 1000 பள்ளிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 2.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

கடந்த 2004-ம் ஆண்டு கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு குழுக்கள் அமைத்து பள்ளிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் வரையறுக்கப்பட்டன. இதன்படி ஒவ்வொரு பள்ளிக்கும் சொந்த நிலம், போதுமான ஆசிரியர்கள், தீத்தடுப்பு சாதனங்கள் போன்றவை இருக்க வேண்டும். இவற்றை பின்பற்றாத 1000 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் கொடுக்காமல் கல்வித்துறை நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் இந்தப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 4 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவது கேள்விக்குறியாகியிருக்கிறது.

அரசின் இந்நடவடிக்கைக்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஆனால் அரசுத் தரப்போ பள்ளிகளின் பாதுகாப்பு விதிகளில் எந்த சமரசமும் இல்லை என்று அறிவித்திருக்கிறது. அரசு விதிகளை பின்பற்றி 2013-ஜூன் மாதத்திற்குள் அனைத்து தனியார் பள்ளிகளும் தொடர் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் அரசுத் தரப்பு உறுதியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+