தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: காவிரி கண்காணிப்புக் குழுவின் உத்தரவுப் படி தமிழகத்துக்கு டிசம்பர் மாதத்துக்குள் 12 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.

தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது. இதை முதலில் ஏற்க மறுத்த கர்நாடகா, ஒரு நாள் தாமதமாக தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட்டது. மேலும் காவிரி கண்காணிப்புக் குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி டெல்லியில் கூடிய காவிரி கண்காணிப்புக் குழு, தமிழகத்துக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் 12 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் கண்காணிப்புக் குழுவின் உத்தரவை ஏற்க முடியாது என்று கர்நாடகா கூறி வருகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீர் வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது காவிரி கண்காணிப்புக் குழுவின் உத்தரவுப்படியான 12 டி.எம்.சி. நீர் போதுமானது அல்ல என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் கண்காணிப்புக் குழு உத்தரவுப் படி 12 டி.எம்.சி. நீரை இந்த டிசம்பர் மாதத்துக்குள் திறந்துவிட வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம், இதில் ஆட்சேபனை இருந்தால் மீண்டும் காவிரி நதிநீர் ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.
இந்த உத்தரவை கர்நாடகா நிறைவேற்றுமா?












Click it and Unblock the Notifications