ஹோட்டலில் ஓசி பிரியாணி கேட்டு குடிபோதையில் ரகளை: 2 போலீசார் சஸ்பெண்ட்
திருவண்ணாமலை: பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று வந்தவாசியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீசார் பிரியாணி கடையில் குடிபோதையில் ரகளை செய்தனர். இதையடுத்து ரகளை செய்த 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6ம் தேதி இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் திருவண்ணாமலை ஆயுதப்படையைச் சேர்ந்த 16 போலீசார் வந்தவாசியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அன்று மாலை 4 மணிக்கு அவர்கள் வந்தவாசி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பிரியாணி கடையில் சாப்பிடச் சென்றனர்.
சாப்பிடச் சென்ற இடத்தில் அவர்கள் குடிபோதையில் கடைக்காரருடன் தகராறு செய்துள்ளனர். மேலும் இதை தட்டிக்கேட்ட பொதுமக்களையும் மிரட்டியுள்ளனர். பணியில் இருக்கையில் மப்பில் ஓசி பிரியாணிக்காக போலீசார் தகராறு செய்ததைப் பார்த்து பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வந்தவாசி போலீசார் பிரியாணி கடைக்கு விரைந்து வந்து ஆயுதப்படை போலீசாரை அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையின் முடிவில் ரகளையில் ஈடுபட்ட ஆயுதப்படை ஏட்டு முத்துலிங்கம், கான்ஸ்டபிள் வீரகுமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications