தகாத வார்த்தையால் பேசுகிறார் அமைச்சர்... தேமுதிக பெண் எம்.எல்.ஏ புகார்
Subscribe to Oneindia Tamil

இன்று காலை சேலம் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸை நேரில் சந்தித்து சுபா இந்தப் புகாரைக் கொடுத்தார். அவருடன் ஏராளமான தேமுதிகவினரும் உடன் வந்தனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ சுபா, தன்னை தலைவாசலில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவினரை அணுகி கோரிக்கை வைத்தாராம். ஆனால் அதை அதிமுகவினர் ஏற்கவில்லையாம். மாறாக பழனிச்சாமியும், அதிமுகவினரும் சுபாவை தகாத வார்த்தைகளால் விமர்சித்ததாக தேமுதிகவினர் கூறுகின்றனர். இதுதொடர்பாக சமீபத்தில் சாலை மறியலும் நடந்தது. இதுதொடர்பாக தேமுதிகவினர் மீது அதிமுகவினர் போலீஸில் புகார் கொடுத்து அது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது தேமுதிகவினர், அதிமுகவினர் மீது புகார் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications