இலவச லேப்டாப் கிடைக்காத கோபத்தில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

நெல்லை மாவட்டத்தில் உள்ள இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. இப்பள்ளியில் பிளஸ் 2 படித்த 209 மாணவ, மாணவிகளில் 130 பேருக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. சுயநிதி பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களுக்கு லேப்டாப் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் தங்களது பெற்றோருடன் சேர்ந்து இலஞ்சி சவுக்கை விலக்கு பகுதியில் திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த குற்றாலம் இன்ஸ்பெக்டர் குமாரவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசுக்கு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை மனு அனுப்புங்கள். சாலை மறியல் செய்ய வேண்டாம் என இன்ஸ்பெக்டர் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு அவ்வழியே போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் இலஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications