தடை விலகியது: தலையணை, நம்பிகோயிலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
நெல்லை: களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள தலையணை மற்றும் நம்பிகோயில் ஆறுகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

புலிகள் காப்பகங்களுக்கு செல்ல தடை
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்பட பல்வேறு புலிகள் காப்பகங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதனையடுத்து காப்பக பகுதியில் உள்ள தலையணை மற்றும் நம்பி கோயில் பகுதிகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் ஒவ்வொரு கடைசி சனிக்கிழமை தோறும் நம்பி கோயிலுக்கு மட்டும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தடை விலகியது
புலிகள் காப்பகங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல சுப்ரீம் கோர்ட் சில கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கியது. ஆனால் சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கிய பின்னரும் சுற்றுலாப் பயணிகள் செல்ல களக்காடு வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.

சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க முடிவு
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்பட பல்வேறு புலிகள் காப்பகங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முண்டந்துறையில் நடந்தது. கூட்டத்தில் களக்காடு வனப்பகுதியில் உள்ள நம்பிகோயில் மற்றும் தலையணை பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

குவியும் சுற்றுலாப் பயணிகள்
களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள பகுதிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது தினமும் இளசுகள் பாட்டில் சகிதமாய் அங்கு படை எடுத்து வருகின்றனர். தொடர்ந்து வனத்துறை சோதனை போட்டாலும் விடுமுறை நாட்களில் அளவுக்கு அதிகமான கூட்டம் வந்து குவிந்து விடுவதால் மது பாட்டில்கள் பிடிபடுவதும், உடைபடுவதும் அரங்கேறி வருகிறது.












Click it and Unblock the Notifications