முலாயம்சிங்குக்கு கடும் நெருக்கடி- சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தொடரும்: சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

Mulayam Singh Yadav
டெல்லி: முலாயம்சிங் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருகிறது.

முலாயம்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சொத்துக் குவிப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வநாத் சதுர்வேதி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2007-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதியன்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக முலாயம்சிங் யாதவ் குடும்பத்தினர் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதியன்று தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் நீதிபதி டாட்டு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது முலாயம்சிங் யாதவ் மற்றும் அவரது மகன்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இருப்பினும் முலாயம்சிங் யாதவின் மருமகளான டிம்பிள் மீதான வழக்கை ரத்து செய்திருக்கிறது.

மேலும், இந்த வழக்கின் விசாரணை நிலவரத்தை சிபிஐ உச்சநீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும். சிபிஐ என்பது சுதந்திரமான ஒரு அமைப்பு. அது சட்டப்படி தமது விசாரணையை தொடரலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+