Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்சாரியைத் திட்டியதற்ககாக மன்னிப்பு கேட்ட மாயாவதி

Subscribe to Oneindia Tamil

Mayawati
டெல்லி: ராஜ்யசபா சபாநாயகர் ஹமீத் அன்சாரியை விளாசித் தள்ளியதற்காக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று மன்னிப்பு கேட்டார்.

வேலைவாய்ப்பில் தலித் மக்களுக்கு முன்னுரிமை கோரும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியினர் மத்திய அரசை வலியுறுத்தினர். ஆனால் இந்த மசோதாவை ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தியபோது அதற்கு சமாஜ்வாடி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் ராஜ்யசபாவில் தினமும் கூச்சல், குழப்பமுமாக இருப்பதால் இந்த வாரம் முழுவதும் அவை முடங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று ராஜ்யசபாவில் அன்சாரியைத் தாக்கி பேசிய மாயாவதி கூறுகையில்,

நான் எதையும் கவனிக்கத் தயாராக இல்லை. கடந்த சில நாட்களாக நண்பகல் 12 மணிக்கு மேல் அவையை நடத்தவிடுவதில்லை. அவையை ஒழுங்காக நடத்துவது உங்கள் கடமை. நண்பகல் 12 மணிக்கு மேல் உங்களை இங்கே பார்க்கவே முடியவில்லை. என்ன மாதிரி ஒரு அவை இது. அவை ஒழுங்காக நடக்க நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதன் பிறகு மாயாவதி கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தான் மோசமாக நடந்து கொண்டதற்காக அன்சாரியிடம் இன்று மாயாவதி மன்னிப்பு கேட்டார்.

அன்சாரி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் பயனைடயும் இந்த மசோதாவை அவர் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+