தஞ்சை வாகனச் சோதனையில் ரூ.50 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்: 8 பேர் கைது
தஞ்சாவூர்: தஞ்சையில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையின்போது ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது. மேலும் இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்ட எஸ்.பி. அன்புவின் உத்தரவுப்படி போலீசார் நேற்று இரவு சபையர் லாட்ஜ் அருகே வாகனச் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சென்னை பதிவு எண் கொண்ட சாம்பல் நிற சான்ட்ரோ காரை நிறுத்தினர். அதில் 8 பேர் இருந்தனர். காரை சோதனையிட்டபோது அதில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ மெட்டா குரிலன் என்ற போதைப் பொருள் இருந்தது.
போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார் அந்த 8 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காரில் இருந்தவர்களின் விவரம் வருமாறு,
1. சேக்தாவூது, சிவகங்கை மாவட்டம் புத்தூர், 2. முகமது பாரூக், தஞ்சை சேப்பனவாரி, சீனிவாசபுரம், 3. நவாஸ் மைதீன், சென்னை சேப்பாக்கம், 4. லெனின் அகமது, சேப்பாக்கம், 5. ஜிம்மாகான், சேப்பாக்கம், 6. மைதீன், சேப்பாக்கம், 7. கலீலுல் ரகுமான், சென்னை ராயப்பேட்டை, 8. முகமது ரபீக், தஞ்சை கீழவாசல்.
அந்த 8 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications