நிலாவில் காய்கறித் தோட்டம் அமைக்க சீனா திட்டம்

சீனா விஞ்ஞானிகள் வருங்காலத்தில், நிலவிலோ அல்லது செவ்வாய் கிரகத்தில்லோ காய்கறித்தோட்டம் அமைக்க உள்ளனர். இதற்காக ஒரு மூடிய அமைப்பில் மக்கள் மற்றும் தாவரங்களுக்கு இடையேயான ஒரு டைனமிக் சமச்சீர் ஆக்சிஜன் நுட்பம், கார்பன் டை ஆக்சைடு, நீர் மீது கவனம் செலுத்தி நடந்து வருவதாக டெங் யிபிங் என்ற சீன விண்வெளி வீரர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் துணை இயக்குனர் கூறினார்.
இச்சோதனையில், நான்கு வகையான காய்கறிகள் வளர்க்கப்பட்டது. அவை, மனிதர்கள் வெளியிடும் கரியமிலத்தை எடுத்து கொண்டு, அந்த அறையில் வாழும் இரண்டு பேருக்கு ஆக்சிஜன் வழங்கியது. அவ்வாறே அச்செடிகள் தொடர்ந்து வளர்ந்ததாகவும், பின்னர் அதை அவர்கள் உணவுக்கு காய்கறிகளாக கூட பயன்படுத்தும் வாய்ப்பும் இருந்ததாக டெங் கூறினார்.
டெங்கின் கூற்று படி, இது தொடர்பான சோதனையின் போது ஒரு 300 கன மீட்டர் மூடிய அறையில் இரண்டு பங்கேற்பாளர்களுக்கு காற்று, தண்ணீர் மற்றும் உணவு நிலையான விநியோகம் கிடைத்ததாக உறுதி செய்யப்பட்டது.
சீனாவில் இவ்வகையில் முதன் முதலாக நடந்த சோதனை இது தான் என்றும், இது அந்நாட்டின் விண்வெளி திட்டத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கியதத்துவம் வாய்ந்தது என்று டெங் கூறினார்.
கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் வாழ்க்கை ஆதரவு அமைப்பு (CELSS) எனப்படும் இந்த அறை போன்ற அமைப்பு 2011-இல் கட்டப்பட்டது. இது சீன விண்வெளி வீரர்கள் வாழ்க்கை ஆதரவு அமைப்புகளில், மூன்றாவது தலைமுறை மாதிரியாக திகழ்கிறது. வருங்காலத்தில், இத்திட்டம் நிலவிலோ அல்லது செவ்வாய் கிரகத்தில்லோ அமல்படுத்தபடும் என தெரிகிறது. சீனர்கள் மட்டுமல்லாது, இச்சோதனைகளில், ஜெர்மனி நாட்டு விஞ்ஞானிகளும் இனைந்து பங்கேற்றனர்.
CELSS தொழில்நுட்பத்தின் அறிமுகம், தாவரங்கள் மற்றும் பாசிகளின் உதவியுடன் விண்வெளியில் காற்று, தண்ணீர் மற்றும் உணவின் நிலையான விநியோகம் கிடைக்க வழிவகை செய்கிறது. இப்போதுள்ள தொழில்நுட்பங்கள் படி, 6 மாதங்களுக்கு மேல் விண்வெளியில் தாங்க கூடிய உணவு பொருட்களை உருவாக்குவதில் மிகுந்த சிரமங்கள் இருந்தன. இக்காரணத்தினால் தான், விண்வெளியில் நீண்ட கால ஆராய்ச்சிகளை விண்வெளி வீரர்களால் மேற்கொள்ள முடியாமல் இருந்தது.
இந்த CELSS-ன் கண்டுபிடிப்பு மனிதகுலத்திற்கு ஒரு பெரிய வரமாக மாறக்கூடும். இந்த தொழில்நுட்பம் சரியாக இயங்க துவங்கினால், வருடக்கணக்கில் நீளும் விண்வெளி பயணங்களை கூட நமது விண்வெளி வீரர்கள் மேற்கொள்ள முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications