துரை தயாநிதி மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பொய் வழக்கு... மு.க.அழகிரி

கிரானைட் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு முன்ஜாமீன் கிடைத்ததை அடுத்து நேற்று மேலூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் அங்கு வந்த மு.க. அழகிரி, எம்.பி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆளும் அதிமுக அரசு திமுக வினர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். தன்னால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு தொடங்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் அரசு தரப்பில் தடுக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.
மேலும் எனது மகன் துரை தயாநிதி மீது பழிவாங்கும் நோக்கத்துடன் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவிடம் நல்லபெயர் வாங்கவேண்டும் என்பதற்காகவே என் மகனை கைது செய்ய துடிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
2010-ம் ஆண்டிலேயே ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தில் இருந்து அவர் விலகி விட்டார். துரை மீது எந்த தவறும் இல்லை. அவர் மீது தவறு இருந்தால் வழக்கு தொடரப்பட்ட போதே நானே அவரை சரண் அடையச் செய்திருப்பேன்.
இந்த வழக்கால் அவரது பிறந்தநாளையோ, திருமணநாளையோ கூட கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இது எங்களுக்கும், அவரை விரும்பியவர்களுக்கும் வருத்தமளிப்பதாக இருந்தது. துரை தயாநிதி வெளிநாட்டுக்கு எங்கும் தப்பி ஓட முடியவில்லை. அவரது பாஸ்போர்ட்டை சரிபார்த்தாலே இது தெரியும். தற்போது அவருக்கு முன்ஜாமீன் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது மகன் மீது தொடரப்பட்ட வழக்கை சட்டப்படி கோர்ட்டில் சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications