சீனாவில் 22 பள்ளிக் குழந்தைகளுக்கு கத்தி குத்து
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: மத்திய சீனாவில் 22 பள்ளிக் குழந்தைகளைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய சீனாவில் ஹென்னான் மாகாணத்தில் செங்பிங் கிராமத்தில் ஆரம்பப் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர் வெறிபிடித்தபடி மாணவர்களை கத்தியால் குத்தி காயப்படுத்தினான்.
அவனைத் தடுக்க முயன்ற முதியவர் ஒருவருக்கும் கத்திக் குத்து விழுந்தது. பின்னர் அந்த மர்ம நபரை பொதுமக்களும் போலீசாரும் விரட்டிப் பிடித்தனர். பிடிபட்டவன் பெயர் மின் யுங்ஜூன் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சீனாவில் இதுபோல் பள்ளிக் கூடங்களில் புகுந்து கத்திக் குத்து தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவதாக பெற்றோர் கவலை தெரிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications