இலங்கையின் வானில் பறக்கும் மர்ம பொருள் என்ன? பீதியில் மக்கள்!
Subscribe to Oneindia Tamil

மாயன் காலண்டரின்படி உலகம் அழியப் போகிறது என்ற பீதி உலகம் முழுவதையும் ஆட்டுவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இலங்கையின் வான்பரப்பில் நள்ளிரவில் மர்ம பொருள் பறந்து செல்வதை பலரும் பார்த்திருக்கின்றனர்.
பீதியை ஏற்படுத்தக் கூடிய வேற்றுகிரவாசிகளின் நடமாட்டமோ என்ற அச்சமும் இலங்கையர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
அண்மையில் இலங்கையின் பல பகுதிகளில் சிகப்பு மழை பொழிந்திருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான ஆராய்ச்சியை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே ஜெமினிட் என்ற விண்கற்களின் மழை ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் பெய்யும் என்றும் இலங்கையின் வான்பரப்பில் தென்படுவதும் அதுவே என்றும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications