26/11 தாக்குதல்: ஹபீஸ் சயீதை கைதே செய்யாமல் இந்தியாவிடம் புழுகிய பாகிஸ்தான்

26/11 மும்பை தாக்குதலுக்கு முக்கிய மூளையாக இருந்த லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீதை பாகிஸ்தான் கைது செய்யாமல் இருந்துள்ளது. பாகிஸ்தானில் அவர் மீது இருந்த பழைய வழக்குகளில் கைது செய்தது. ஆனால் நீதிமன்றம் அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் மும்பை தாக்குதல் குறித்து சயீதை கைது செய்ததாக பாகிஸ்தான் இந்தியாவுக்கு தவறான தகவலை அளித்துள்ளது.
கடந்த வாரம் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இந்தியா வந்திருந்தபோது பகிர்ந்து கொண்ட ஆவணங்களின் மூலம் தான் இது தெரிய வந்துள்ளது. மேலும் மும்பை தாக்குதல் தொடர்பாக சயீதுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் பொய் சொன்னதும் அந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அந்த ஆவணங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இன்று ராஜ்யசபாவில் காண்பித்து பாகிஸ்தானின் குட்டை உடைத்தார். மாலிக்கிற்கு சயீத் விவகாரத்தில் தவறான தகவல்களை அளித்துள்ளனர் என்றார் ஷிண்டே. ஏதோ பழைய வழக்குகளில் சயீதை பாகிஸ்தான் கைது செய்தது தெரிந்து இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து ஷிண்டே இன்று ராஜ்யசபாவில் கூறுகையில்,
சயீத் கைது செய்யப்பட்ட 3 வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களை இந்தியாவிடம் அளிக்கத் தயார் என்று மாலிக் என்னிடம் தெரிவி்த்தார்.
மும்பை தாக்குதலுக்காக அல்லாமல் வேறு வழக்குகளுக்காக சயீத் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் மும்பை தாக்குதல் வழக்கில் சயீதை 3 முறை கைது செய்ததாகவும் போதிய ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் விடுவித்ததாகவும் பாகிஸ்தான் அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்திருந்தார் என்றார்.












Click it and Unblock the Notifications