டெல்லி பலாத்கார பயங்கரம்... 2 குற்றவாளிகள் கைது, இரும்புக் கம்பி பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவியை ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்த பயங்கர சம்பவம் தொடர்பாக 2 குற்றவாளிகளைப் போலீஸார் கைது செய்துள்ளனர். மாணவியை அடிக்கப் பயன்படுத்திய இரும்புக் கம்பியும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் தனியார் பேருந்தில் பயணித்தபோது அந்தப் பெண்ணுக்கு இப்படி ஒரு கொடுமை நடந்தது. இந்தக் கொடுமையை ஐந்து பேர் கொண்ட கும்பல் அரங்கேற்றியது.

பின்னர் பாலம் ஒன்றில் அப்பெண் தூக்கி வீசப்பட்டார். அவர் தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பஸ்சின் டிரைவரும், அவரது தம்பியும் இவர்கள் ஆவர். பஸ் டிரைவரின் பெயர் ராம் சிங். அவரது தம்பி பெயர் முகேஷ். இவர்கள் தவிர மேலும் 4 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணவியையும், அவரது நண்பரையும் தாக்கப் பயன்படுத்திய இரும்புக் கம்பியையையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+