திருச்சியில் "குண்டு பெண்" -பீதி கிளப்பிய வாலிபர்: 'ஆரஞ்சு நிற' துப்பட்டா பெண்களுக்கு சோதனை!

திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்துக்கு நேற்று மாலை வந்த மர்ம தொலைபேசியில், சத்திரம் பேருந்து நிலையத்தில் பச்சைக் கலர் சுடிதாருடன் ஆரஞ்சு நிற துப்பட்டா அணிந்து நிற்கும் பெண் வெடிகுண்டுடன் நிற்பதாக ஒரு வாலிபர் கூறினார்.
இதையடுத்து சத்திரம் பேருந்து நிலையத்துக்கு விரைந்து சென்ற போலீசார், மர்ம நபர் கூறியபடியான அடையாளத்துடன் இருந்த பெண்ணை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். ஆனால் அந்த உடை அணிந்திருந்த பெண்ணிடம் எந்த ஒரு வெடிபொருளும் சிக்கவில்லை.
இருப்பினும் சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் பச்சை கலர் சுடிதார், ஆரஞ்சு நிற துப்பட்டா அணிந்த பெண்கள் அனைவரையும் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் எந்த ஒரு வெடிகுண்டும் கிடைக்கவில்லை.
யாரோ ஒரு இளம் பெண்ணை பழிவாங்க நினைத்த வாலிபரின் சதியாகவே இது என போலீசார் கருதுகின்றனர். இதைத் தொடர்ந்து பேருந்து நிலைய காமிராவில் பதிவான உருவங்களை வைத்து கடைக்காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபரைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications