காதலிக்க மறுப்பதா... அரிவாளால் வெட்டிய ராணுவ வீரர்.. கல்லூரி மாணவி பரிதாப மரணம்
நெல்லை: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை அரிவாளால் சரமாரியாக வெட்டித் தள்ளினார் ராணுவ வீரர் ஒருவர். மாணவியின் அப்பாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பிரேமா. இவர் பி.காம் படித்து வந்தார். இவரை மணிகண்டன் என்ற ராணுவ வீரர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை பிரேமா ஏற்க மறுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் பிரேமாவை வழிமறித்து காதலை ஏற்குமாறு கூறியுள்ளார் மணிகண்டன். அதற்கு பிரேமா மறுத்துள்ளார். இதையடுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டார். அதைத் தடுக்க முயன்றார் தந்தை பெரியசாமி. அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
படுகாயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பிரேமா உயிரிழந்தார். பெரியசாமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications