நக்கீரன் கோபால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு - முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்தார்
சென்னை: நக்கீரன் கோபால், இணையாசிரியர் காமராஜ் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கைத் தொடர்ந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
நக்கீரன் பத்திரிக்கையில் ‘அ.தி.மு.க.வை கலக்கும் நிழல் முதல்வர்கள்' என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி சார்பில் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் சென்னை செசன்சு கோர்ட்டில் மேலும் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "கடந்த 5-ந் தேதி வெளியான நக்கீரன் பத்திரிக்கையில் ‘அ.தி.மு.க.வை கலக்கும் நிழல் முதல்வர்கள்' என்ற தலைப்பில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தி தமிழக அரசுக்கும், என்னுடைய பணிக்கும் களங்கம் ஏற்படும் வகையில் அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் உண்மை தன்மை கிடையாது. வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அச்செய்தி அமைந்துள்ளது. இந்த செய்தி வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகிய 2 பேரையும் கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications