பாகிஸ்தானில் 6 வயது இந்து சிறுமி சீரழிப்பு: குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க பிலாவல் உத்தரவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 6 வயது இந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் சர்தாரியின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் உமர்கோட் மாவட்டத்தில் உள்ள குலாம் நபி ஷா நகரில் வசிக்கும் 6 வயது இந்து சிறுமி இம்மாத துவக்கத்தில் கடத்தி கற்பழிக்கப்பட்டார். அவருக்கு உமர்கோட், மிர்புர்காஸ், ஹைதராபாத்தில் உரிய சிகிச்சை கிடைக்காததால் அவரின் உறவினர்கள் சிறுமியை கராச்சி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த மனிதத் தன்மையற்ற செயலைச் செய்தவர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்க ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், அதிபர் சர்தாரியின் மகனுமான பிலாவல் பூட்டோ சிந்து மாகாண அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளைச் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கராச்சியில் உள்ள ஷஹீத் மோஹ்தர்மா பெனாசிர் பூட்டோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு பிலாவல் பூங்கொத்தை அனுப்பி வைத்துள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் வசிக்கும் இந்து சமூகத்தினரை கடத்துதல், கொடுமைப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் இந்த ஆண்டில் மட்டும் பல முறை நடந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications