நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் தமிழக பொறியாளர் கடத்தல்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தாம்சன் பிரிட்டோ என்ற பொறியாளர் நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரது மகனான தாம்சன் பிரிட்டோ, நைஜீரியவில் உள்ள ஜெர்மன் கப்பலில் பணியாற்றினார். பொறியாளரான அவர், மும்பை ஏஜென்சி நிறுவனம் மூலம் இந்தப் பணியைப் பெற்றார்.
இப்பணிக்காக கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி நைஜீரியாவின் அபிட்ஜா துறைமுகத்து சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு மும்பை ஏஜென்சி நிறுவனம் தாம்சன் பிரிட்டோவின் தந்தைக்கு அதிர்ச்சி தகவலைக் கொடுத்தது.
தாம்சன் பிரிட்டோ உட்பட 5 பேரை நைஜீரிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றிருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் தாம்சன் பிரிட்டோவின் குடும்பத்தினர் அவரை பத்திரமாக மீட்க தமிழக அரசையும் மத்திய அரசையும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கெனவே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டனி என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் பிணைக் கைதியாக இருந்து வரும் நிலையில் மீண்டும் குமரியைச் சேர்ந்த ஒருவர் கடற்கொள்ளையர்களிடம் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சோமாலிய கடற்பரப்பில் மொத்தம் 43 இந்தியர்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 28 இந்தியர்கள் கடற்கொள்ளையர்களாள் கடத்தப்பட்டிருக்கின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications