இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவுக்கு செம அடி! ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ்!

இமாச்சல் பிரதேசத்தின் 68 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் 459 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். குஜராத் மாநில தேர்தலும் நடைபெற வேண்டியிருந்ததால் ஒன்றரை மாதம் கழித்து இன்றுதான் வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்குப் பதிவு தொடங்கி சில மணி நேரம் வரை பாஜக வெற்றி முகத்தில் இருந்தாலும் பின்னர் நிலைமை தலைகீழானது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாரதிய ஜனதா கட்சி 26 தொகுதிகளிலும் காங்கிரஸ் 36 தொகுதிகளிலும் வென்றிருக்கின்றன.
கடந்த தேர்தலில் 41 தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி பெற்றிருந்தது. இம்முறை படுதோல்வியை சந்தித்திருக்கிறது. கடந்த முறை காங்கிரஸ் 23 தொகுதிகளைத்தான் பெற்றிருந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி மிகவும் உற்சாகத்தில் இருக்கிறது.
முதல்வர் யார்?
இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் வீர்பத்ரசிங் முதல்வராகக் கூடும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சராக இருந்த வீர்பத்ரசிங்குக்கு எதிராக ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றம் பதவி செய்ததைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்திருந்தார். ஆனால் இமாச்சல் மாநில காங்கிரஸ் தலைவராக வீர்பத்ரசிங்கை நியமித்து தேர்தலில் போட்டியிட உத்தரவிட்டது காங்கிரஸ் மேலிடம்.
இதனால் வீர்பத்ரசிங்குக்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் ஊழல் வழக்கு சிக்கல் இருப்பதால் ஆனந்த் சர்மா பெயர் அடிபடுகிறது
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் வீர்பத்ரசிங், சோனியா காந்திதான் இறுதி முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications