For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் சீரழிக்கப்பட்ட பெண் பிழைத்தாலும் நரக வாழ்க்கை தான்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் சீரழிக்கப்பட்ட மருத்துவ படிப்பு மாணவி உயிருக்கு போராடி வருகிறார். அவர் பிழைத்தாலும் அவர் வாழ்க்கை நரகம் தான்.

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட மருத்துவ படிப்பு படித்த மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் இன்றுடன் 5 நாட்களாக உயிருக்கு போராடி வருகிறார். கயவர்கள் இரும்புக் கம்பியால் தாக்கியதில் அவரின் குடல் பகுதி பெருத்த சேதம் அடைந்ததால் அறுவை சிகிச்சை செய்து அதில் 15 இன்ச் அளவுக்கு எடுத்துவிட்டனர்.

பாவிகள் அந்த பெண்ணின் குடலில் ஒரு பகுதியை பேருந்தில் வைத்து உருவியுள்ளனர். இதுவரை அந்த பெண்ணுக்கு 5 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ள அவர் பிழைத்தாலும் இனிமேல் அவருடைய வாழ்க்கை நரகமாகத் தான் இருக்கும். அவரால் இனி தனது வாழ்நாளில் ஒரு வேளை கூட உணவை வாயால் உண்ண முடியாது.

எப்பொழுதும் நரம்பு மூலம் தான் உணவை ஏற்ற வேண்டும். அவரால் மருத்துவர்களின் உதவி இன்றி வாழ முடியாது. இந்நிலையிலும் அவர் வாழ விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Due to severe damage of intestines, Delhi rape victim could not eat thorugh her mouth any more. Even if she wins in this struggle and gets back on her legs, her life would be miserable.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X