இதை விட மிகப் பெரிய அவமானம் டெல்லி காவல்துறைக்கு வந்து விடாது - சோனியா

Subscribe to Oneindia Tamil

Sonia Gandhi
டெல்லி: ஓடும் பஸ்சில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கொடூரமானது. டெல்லி காவல்துறைக்கு இது மிகப் பெரிய அவமானம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

இந்தக் கொடுமையான சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் மமதா சர்மா ஆகியோருக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் சோனியா கூறியிருப்பதாவது, டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் மிகவும் கொடுமையானது, அக்கிரமமானது, கண்டனத்துக்குரியது. டெல்லி காவல்துறைக்கு இது மிகப் பெரிய அவமானம். இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சட்டம் ஒழுங்கை பலப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்கு எனது ஒத்துழைப்பும், கட்சியின் ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு என்று கூறியுள்ளார் சோனியா காந்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+