கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கு: ஜாமீன் பெற்ற கையோடு திக்விஜய் சபதம்
டெல்லி: பாஜக தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிற்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் ஒரு பெரும் தொகையை பெற்றதாகக் கூறப்படும் பாஜக எம்பி அஜய் சன்செட்டியுடன் வியாபாரம் செய்வதாக பாஜக தலைவர் நிதின் கட்காரி மீது காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டினார். இதையடுத்து கட்காரி திக்விஜய் சிங் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரிதத் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சுதேஷ் குமார் திக்விஜய் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கடந்த 17ம் தேதி உத்தரவிட்டார்.
அதன்படி திக்விஜய் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். நீதிபதி இந்த வழக்கை வரும் ஜனவரி மாதம் 31ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
ஜாமீன் பெற்று வெளியே வந்த திக்விஜய் சிங் கட்காரி மீது தான் கூறிய புகார்களை ஆதாரங்களுடன் நிரூபிப்பதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நிதின் கட்காரியைப் பற்றி நீதிமன்றத்தின் முன்பு நான் அனைத்தையும் தற்போது கூற முடியும். அவர் எப்படிபட்ட தொழில் அதிபர் என்றும், அவருடைய நிறுவனங்கள் அனைத்தும் போலி என்றும், அவர் எப்படி லாபம் சம்பாதித்தார் என்றும் கூற முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications