போதையில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்தேன்:கொலையாளி சுப்பையா
Subscribe to Oneindia Tamil

போலீசிடம் அளித்திருக்கும் வாக்குமூலத்தில், குடி போதையில் தாம் தாதன்குளம் ரயில்நிலையத்தை வந்தடைந்ததாகவும் இரவு முழுவதும் அங்கேயே உறங்கியதாகவும் கூறினான்.
பின்னர் காலையில் எழுந்து எஞ்சியிருந்த மதுவையும் குடித்துவிட்டு நடந்தபோது மாணவி புனிதா அந்த வழியே சென்றிருக்கிறார். போதையின் உச்சத்தில் இருந்த தாம் அந்த மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சித்தும் முடியாமல் போனதால் தம்மை காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்று அஞ்சி கொலை செய்தேன் என்று கூறியுள்ளான்.
தமிழகத்தில் மதுபோதையால்தான் கொலை, கொள்ளைகள், பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் பள்ளி மாணவியை கொலை செய்த கொலையாளி மதுவின் உச்சத்தால் கொலை செய்ததை ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications