டெல்லி மாணவி வாய் திறந்து பேசியதோடு, நர்ஸ் உதவியோடு சில அடி நடந்தார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் சீரழித்தது. இதை தடுக்க முயன்ற அந்த பெண்ணின் ஆண் நண்பர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். அந்த பெண்ணையும் இரும்புக் கம்பியால் தாக்கினர். இதில் படுகாயமைடந்த அந்த பெண் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு 5 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தொடர்ந்து மோசமாக இருந்த அவரது உடல் நிலை தற்போது மெதுவாக தேறி வருகிறது. இதுவரை தான் கூற விரும்புவதை எழுதிக் காண்பித்த அவர் நேற்று முன்தினம் மாலை முதன்முறையாக வாய் திறந்து தான் நலமாக இருப்பதாக பேசியுள்ளார். மேலும் நேற்று மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலமும் அளித்துள்ளார். இது தவிர தன்னைப் பார்க்க வந்த நண்பர்களிடம் தனது உடல் நலம் குறித்து தெரிவித்துள்ளார்.
இத்தனை நாட்களாக செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்த அவர் நேற்று நர்ஸின் உதவியோடு சில அடி எடுத்து வைத்துள்ளார். இதற்கிடையே அவரை சீரழித்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications