கர்நாடகா: ஈஸ்வரப்பா வீட்டு ரெய்டில் சிக்கியது 37 கிலோ வெள்ளி-2 கிலோ தங்கம்!

Subscribe to Oneindia Tamil

Eshwarappa
பெங்களூர்: கர்நாடகா மாநில துணை முதல்வரு மாநில பாஜக தலைவருமான ஈஸ்வரப்பா வீட்டில் இன்று லோக் அயுக்தா போலீசார் நடத்திய சோதனையில் 2கிலோ தங்கமும் 37 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவரும் துணை முதல்வருமான ஈஸ்வரப்பாவும் அவரது குடும்பத்தினரும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 13-ந் தேதி நாகலட்சுமி பாய் என்பவர் ஆளுநர் பரத்வாஜிடம் புகார் கொடுத்தார். இப்புகார் கொடுக்கப்பட்ட அதே நாளில் வழக்கறிஞர் வினோத்குமார் என்பவர் ஷிமோகா லோக் அயுக்தா நீதிமன்றத்தில் இதே போல் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில் ஈஸ்வரப்பா மற்றும் அவரது மகன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய லோக் அயுக்தா போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை ஈஸ்வரப்பாவின் பெங்களூர் மல்லேஸ்வரம் வீடு, ஷிமோ வீடு, அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை, உதவியாளர் சோமு சேகர் வீடு உட்பட 7 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மட்டுமின்றி 37 கிலோ வெள்ளி, 2 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

முன்னதாக தமது வீட்டில் நடத்தப்படும் சோதனை குறித்து கருத்து தெரிவித்த ஈஸ்வரப்பா, உண்மை வெளிவரட்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தங்கமும் வெள்ளியும் கிலோ கணக்கில் கைப்பற்றப்பட்டிருப்பதால் அவர், துணை முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது,.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+