டெல்லி போராட்டம்: அதீத முக்கியத்துவம் தரும் அமெரிக்க ஊடகங்கள்

கடந்த ஞாயிறன்று டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது பற்றிய செய்திகள் இந்திய ஊடகங்களில் அதிகம் வெளியாது. இதனால் ஏற்பட்ட எழுச்சியினால் தலைநகர் டெல்லியில் போராட்டங்கள் வெடித்தன. ஜனாதிபதி மாளிகை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு போராட்டங்கள் தீவிரமானது. போராட்டக்காரர்களிடையே பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி ஆகியோர் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் பாலியல் பலாத்காரத்திற்காக நடைபெற்று வரும் போராட்டங்கள் பற்றிய செய்திகள் அமெரிக்க ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படுகின்றன.
இது தொடர்பாக தேசிய பப்ளிக் ரேடியோ செய்தி ஒலிபரப்பிய போது, ‘‘ பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக நீதி கேட்டு நடக்கிற போராட்டங்கள் இதற்கு முன் நடக்காதவை'' என கூறப்பட்டது.
பிரசித்திபெற்ற நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், ‘‘ஒரு கற்பழிப்பு சம்பவத்தால் இந்தியாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன'' என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் நிதிப்பற்றாக்குறை பிரச்சினை, துப்பாக்கி கலாச்சாரம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், டெல்லி பெண்ணின் பாலியல் பலாத்காரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் மக்கள் கொந்தளித்துப்போய் நடத்துகிற போராட்டங்கள் பற்றிய செய்திகளை சி.என்.என். டி.வி. பரபரப்பாக்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், போன்றவையும் இது பற்றிய செய்திகளை பரபரப்பாக வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications