பிரணாப் முகர்ஜி ஒரு மணி நேரம் உட்கார்ந்துட்டுப் போனதுக்கு ரூ. 37 லட்சம் ஏவ்..!
Subscribe to Oneindia Tamil

கர்நாடக மாநிலம் பெல்காம் நகரில் சுவர்ண விதான் செளதா கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள விதான் செளதாவைப் போல கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தில் சமீபத்தில் சட்டசபைக் கூட்டமும் நடந்தது.
இக்கட்டடத்தை கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவுக்காக பெருமளவில் மக்கள் பணத்தை செலவிட்டுள்ளது கர்நாடக அரசு.
அதாவது ரூ. 1.98 லட்சம் பணத்தை பிரணாப்முகர்ஜி பயணத்திற்காக மட்டும் செலவிட்டுள்ளனர். சர்க்யூட் ஹவுஸை புதுப்பிக்க ரூ. 1.61 கோடி பணம் செலவிடப்பட்டுள்ளது. அதை விடக் கொடுமை பிரணாப் முகர்ஜி சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே தங்கியிருந்த அறையை புதுப்பிக்க ரூ. 37 லட்சம் பணத்தை வாரியிறைத்துள்ளனர்.
நாடு வெளங்கும்...!












Click it and Unblock the Notifications