For Daily Alerts
Just In
விருதாச்சலத்தில் உறவினரை தாக்கிவிட்டு பெண் கற்பழிப்பு: 7 பேர் கைது
கடலூர்: விருதாச்சலத்தில் உறவினருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள மணிமுத்தூறு பகுதியில் 20 வயது பெண் தனது உறவினருடன் நின்று பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு கும்பல் அந்த உறவினரை தாக்கிவிட்டு அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டது என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அந்த புகாரின்பேரில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரைணை நடத்தி 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக கடந்த வாரம் பள்ளிக்கு சென்ற 7ம் வகுப்பு மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து திமுகவினர் இன்று தூத்துக்குடியில் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Police arrested 7 persons in a gang rape case in Virudhachalam. A 20-year old girl was gang raped and her relative was attacked.
Story first published: Wednesday, December 26, 2012, 14:47 [IST]