மாணவிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளித்ததில் அரசியல் தலையீடு இல்லை: சல்மான் குர்ஷித்
Subscribe to Oneindia Tamil

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே மாணவியை வெளிநாட்டுக்கு மருத்துவர்கள் அழைத்துச் சென்றதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால் இதை மறுத்துள்ள அமைச்சர் சல்மான் குர்ஷித், அமெரிக்கா, பிரிட்டன் அல்லது ஜெர்மனிக்கு மாணவியை அழைத்துச் செல்ல மருத்துவர்கள் ஆலோசனை செய்தனர். ஆனால், குறைந்த பயண நேரத்தைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மாணவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை விரைவாக கிடைக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செயதது. மேலும், சிங்கப்பூர் அழைத்துச் செல்வதற்கும், மருத்துவமனையில் சேர்ப்பதற்கும், அங்கு தங்குவதற்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்தது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications