98 வயதில் ஒரு குடி வெறியர்.. மகன் பணம் தராததால் தற்கொலை செய்த கொடுமை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடிவெறி மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று பாருங்கள். 98 வயதான ஒரு குடுகுடு தாத்தா, தான் மது அருந்த மகன் பணம் தரவில்லையே என்ற கோபத்தில் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போயுள்ளார்.

100 வயது வரை வாழ்ந்து சரித்திரப் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய அவர், குடிவெறியில் சறுக்கி விழுந்து அவப்பெயருடன் போய்ச் சேர்ந்துள்ளார்.

சென்னை கொடுங்கையூர் சூழ்புனைகரையைச் சேர்ந்தவர் வீரராகவன். இவருக்கு 98 வயதாம். இவரது மகன் வாசு. வீரராகவனுக்கு இந்த வயதிலும் குடிப் பழக்கம் உண்டாம். டெய்லி குடிப்பாராம். இதற்காக தினமும் தனது தந்தைக்கு 100 ரூபாய் கொடுப்பாராம் மகன் வாசு. ஆனால் வெள்ளிக்கிழமையன்று பணம் தரவில்லை போலும்.

இதனால் கோபமும் விரக்தியும் அடைந்து விட்டாராம் வீரராகவன். உடனே வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டு விட்டார். அதில் படுகாயமடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து போனார்.

எவ்வளவு கொடுமையான சம்பவம் இது...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+