குஜராத் தேர்தலில் கழுத்தறுத்த காங்கிரஸ்- அணியைவிட்டு வெளியேறும் தேசியவாத காங்கிரஸ்
கொச்சி: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தால் லோக்சபா தேர்தலில் அக்கட்சியின் தலைமையிலான கூட்டணியில் நீடிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டியிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவார் கூறியுள்ளார்.
கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் 9 இடங்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே வேட்பாளர்களை நிறுத்தியது. எஞ்சிய தொகுதிகளில் போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
இது எப்படி கூட்டணியாக இருக்க முடியும்? காங்கிரஸ் கட்சியின் இந்த அணுகுமுறையால்தான் அங்கு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது. கூட்டணி என்ரு அறிவித்துவிட்டால் நேர்மையுடன் இருக்க வேண்டும். ஆனால் இப்படியான அணுகுமுறை நீடிக்கும் நிலையில் நிச்சயமாக லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நீடிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியதுதான் இருக்கும் என்று கொட்டித் தீர்த்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications