நெல்லையில் தொடர்ந்து பரவும் மர்ம காய்ச்சல்- 5 வயது சிறுவன் பலி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையை அடுத்துள்ள மேலப்பாளையத்தில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலியானான்.

நெல்லை மாவட்டத்தில்டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சமீபத்திய மழையால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி விதவிதமான காய்ச்சலை பரப்பு வருகிறது. இதனால் மருத்துவமனைகளில்கூட்டம் அலை மோதுகிறது. கடந்த வாரம் சேரன்மகாதேவியில் டெங்குவால் பாதித்த இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்த கர்ப்பிணி பெண் பலியானார். இந்த நிலையில் மேலப்பாளையத்தில் மர்ம காய்சசலுக்கு சிறுவன் ஒருவன் பலியானான்.

மேலப்பாளையம் ஆமீன்புரம் 9வது தெருவை சேர்ந்தவர் ரம்ஜானின் மகன் முஜாஹீதின். 1-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவு முஜாஹீதினுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவனை சிகிச்சைக்காக மேலப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவனது உடல் நிலை மோசமடைந்தது. நேற்று காலை சிறுவன் மரணம் அடைந்தான்.

இதையடுத்து மாநகராட்சி வினியோகிக்கும் சுதாராமற்ற குடிநீரால் சிறுவன் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மேலப்பாளையம் ஆமீன்புரம் 4வது தெருவில் உள்ள 29வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஹைருன்னிசா வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது அவர் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அங்கேயே தரையில் அமர்ந்து மாநகராட்சியை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+