டாஸ்மாக் கடை மீது கல்வீச்சு.. மனிதநேயக் கட்சி போராட்டத்தில் பரபரப்பு

தென்காசி யானை பாலம் அருகிலிருந்து ஊர்வலமாக வந்து பழைய பேருந்து நிலையம் அருகில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் டாஸ்மாக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கபட்டனர்.
இந்த நிலையில், சுமார் 250பேர் ஊர்வலமாக வந்துகொண்டிருந்த போது அவர்களில் சிலர் வழியில் இருந்த ஒரு டாஸ்மாக் கடைக்குள் திடீரென புகுந்தனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதையும் மீறி சிலர் உள்ளே புகுந்து விட்டனர்.
அவர்களை மிகவும் சிரமப்பட்டு போலீஸார் வெளியேற்றினர். இந்த நிலையில் கடை மீது திடீரென சிலர் கல்வீச்சில் இறங்கினர். அப்போது கல் விழுந்ததில் ஒரு போலீஸ்காரருக்குக் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அனைவரையும் தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் அரை மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications