ஆங்கில புத்தாண்டு: திருச்செந்தூர் கோயில் பூஜை நேரம் மாற்றியமைப்பு
திருச்செந்தூர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாளை திருச்செந்தூர் கோயிலில் பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாளை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணி்க்கு விஸ்வரூப தீபாரதனை, 3 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது.
புத்தாண்டு தினத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
புத்தாண்டு தரிசனத்திற்காக ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா, உள்துறை கண்காணிப்பாளர்கள் கணேசன், சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications