அமெரிக்காவில் ஆந்திர மதுக் கடை உரிமையாளர் மர்ம மரணம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: ஆந்திராவைச் சேர்ந்த மதுக்கடை உரிமையாளர் ஒருவர் அமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மரணமடைந்த நபரின் பெயர் வெங்கட் ரெட்டி கோலி. 47 வயதான இவர் ஓஹையோ மாகாணத்தின் கொலரியன் நகரில் மதுக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் இவர் தனது கடையில் மர்மமான முறையி்ல இறந்து கிடந்தார்.
அவரது உடலில் பல இடங்களில் காயம் காணப்பட்டது. அவரை யாரோ கொன்றிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications