பலாத்காரத்துக்குப் பலியான பெண் குடும்பத்துக்கு ரூ35 லட்சம் உதவி! சொந்த ஊரில் அஸ்தி கரைப்பு!
டெல்லி: ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் பலியான மாணவியின் குடும்பத்துக்கு ரூ35 லட்சம் நிதி உதவியை டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுகள் வழங்கியுள்ளன.
பலாத்கார கும்பலால் பலிகொள்ளப்பட்ட தமது மகளின் நினைவில் மூழ்கிக் கிடக்கும் தாயை சமாதானப்படுத்த உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டெல்லியில் இருந்து காசி சென்ற அவர்கள் பல்லியா மாவட்டத்தில் உள்ள பூர்வீக கிராமமான கலனுக்கு சென்றனர். அங்கு கிராமத் தலைவர் சிவமந்திர் சிங் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இன்று காலை அப்பெண்ணின் அஸ்தி அஸ்துலி பதுலியா கேட் என்ற இடத்தில் கங்கையில் கரைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மாணவியின் குடும்பத்துக்கு டெல்லி மாநில அரசு ரூ15 லட்சமும் உத்தரப்பிரதேச மாநில அரசு ரூ20 லட்சமும் நிதி உதவி கொடுப்பதாக அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications