கலைஞர் டி.வி மீது வழக்கு தொடர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி!

கரூர் பெரியகுலத்துப்பாளையத்தை சேர்ந்த கோகுல் என்பவர் கடந்த ஆண்டு தாம் கடத்திச் செல்லப்பட்டு சொத்துகளை மிரட்டி எழுதி வாங்கியது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார். இதே போல் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த சேரன் என்பவர் கரூரில் தாம் நடத்திவந்த அரசு கேபிளை அபகரித்துக் கொண்டதாக செந்தில் பாலாஜி மற்றும் தம்பி மீது மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.
ஆனால் தமது பெயருக்கு அவதூறு உண்டாக்கும் வகையில் வழக்கறிஞர் மணிராஜ், காலைக்கதிர் நாளிதழின் ஆசிரியர் வரதன், கரூர் கலைஞர் டி.வி. நிருபர் தண்டபாணி, கலைஞர் டி.வி. முதன்மை செய்தி ஆசிரியர் தயாள் மற்றும் கலைஞர் டி.வி மேலாண்மை இயக்குநர் அமிர்தம் ஆகிய 5 பேர் மீதும் அமைச்சரின் தம்பி அசோக்குமார் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
கரூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் விசாரணைக்குப் பிறகு 6 பேரும் வரும் 28-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications