பிறந்தது 2013 புத்தாண்டு- தமிழகம், புதுவையில் சிறப்பான கொண்டாட்டம்!

சென்னை சாந்தோம் கிறிஸ்துவ தேவாலாயத்தில் கிறிஸ்துவர்கள் ஒன்று கூடி இப்புது ஆண்டை வரவேற்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் இப்புத்தாண்டை வரவேற்று கொண்டாடினர்.
புதுச்சேரியிலும் பொதுமக்கள் இப்புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். சென்னையில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை மற்றும் மாமல்லபுரம் கடற்கரையில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில்...
ஆனால் தலைநகர் டெல்லியில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் மருத்துவ மாணவி உயிரிழந்த சோகத்தில் மூழ்கியிருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டவில்லை. டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தொடர்ந்தும் போராட்டங்கள் நீடித்தே வருகின்றன.
டெல்லியில் ஹோட்டல்கள், கிளப்புகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் தங்களது புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்திருந்தனர்.
மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் கடுமையான கண்காணிப்புக்கு இடையேயும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன.












Click it and Unblock the Notifications