ஓடும் சுரங்க ரயிலில் தள்ளிக் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் தகனம்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் ஓடும் பாதாள ரயிலில் தள்ளிவிட்டு கொல்லப்பட்ட இந்தியரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
நியூயார்க் நகரில் 46-வது வயதான இந்தியரான சுனந்தோ சென்னை அந்நாட்டுப் பெண் ஒருவர் சுரங்க ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இதற்குக் காரணமாக, இந்துக்களையும் முஸ்லிம்களையும் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் எனக்குப் பிடிக்காது என்பதாலேயே தள்ளிக் கொன்றேன் எனக் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அப்பெண்ணின் மனநிலை குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுனந்தோ சென்னின் உடல் நேற்று நியூயார்க்கில் தகனம் செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் நண்பர்கள், அவரது தொழில் பங்குதாரர்கள், இந்திய தூதரகப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications