புதுவை பாலியல் பலாத்கார பயங்கரம்- மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சி
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரியை அடுத்த திருபுவனை பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவியை தனியார் பேருந்து நடத்துநரும் அவரது நண்பரும் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். கடந்த 2 நாட்களாக இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியையும் கைது செய்யக் கோரி இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் மாணவி சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை அருகே அவரது தந்தை தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். மருத்துவமனை அருகே பெட்ரோல் பங்கில் தம் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். ஆனால் அருகில் இருந்தோர் அவரைத் தடுத்து காப்பாற்றினர்.
புதுச்சேரியை பலாத்கார சம்பவம் உலுக்கியிருக்கும் நிலையில் மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிரது.












Click it and Unblock the Notifications