பிப்ரவரி 20, 21ல் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்: தமிழகத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

Strike
தூத்துக்குடி: வரும் பிப்ரவரி மாதம் 20, 21 ஆகிய தேதிகளில் நடக்கும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக 3 லட்சம் பேர் பங்கேற்கவிருக்கிறார்கள்.

இது குறி்த்து தூத்துக்குடியில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் இரா.முத்து சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மத்திய அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கை கண்டித்து தேசிய அளவில் வரும் பிப்ரவரி மாதம் 20, 21 ஆகிய தேதிகளில் வங்கி, ஆயுள் காப்பீட்டுத்துறை ஊழியர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும், மாநில தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10,000ஆக நிர்ணயிக்க வேண்டும், தொழிற்சங்க உரிமை மீது கடும் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் இந்தியா முழுவதும் 12 கோடி பேர் கலந்து கொண்டனர். இதை ஐரோப்பா கண்டமே திரும்பிப் பார்த்தது. ஆனால் மத்திய அரசு திரும்பிப் பார்க்கவில்லை. தற்போது நடைபெற உள்ள வேலை நிறுத்தப் போராட்டம் மத்திய அரசை ஸ்தம்பிக்க வைக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+